அறிமுகம்

Thursday, March 19, 2009 | | |

நீண்ட காலமாக எழுதவேண்டும் என்ற அவா இருந்தபோதும் எழுதிய போதும் எதையும் எதிலும் பிரசுரிக்கவில். நீர்வளம் நிலவளம் யாவும் நிறைந்த யாழ்குடாநாட்டில் உள்ள சிறுகிராமம் எனது ஊர்.  இங்கே உள்ளவர்களின் பிரதான தொழில் விவசாயம். எனினும் படித்தவர்கள் பலர் இலிதர்கள் ஆசிரியர்கள் கணக்காளர் பொறியியளாளர்கள் தாதிகள் என பல்வேறு அரச உத்தியோகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். மருத நிலமும் அருகே நெய்தல் நிலமும் அமையப் பெற்ற பிரதேசமாக எனது ஊர். வயல் நிலங்கள் சூழப்பட்டு பாடசாலைகள் கோவில்கள்  சந்தைகள் என ஒருங்கே மையப்பெற்றது எனது ஊர்.

இன்று புலம் பெயர்வினாலும் இடப்பெயர்வினாலும் மக்கள் எங்கெல்லாமோ சென்றுவிட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இருவர் என வாழும் வாழ்க்கையும் பரம்பரையான வீட்டுச் சொந்தக்காரர் இல்லாது வீட்டுச் சொந்தக்காரரே போனாலும் நீங்கள் யார் என்று கேட்கும் தன்மையும்தான் எனது ஊரின் நிலை. எங்கள் ஊரின் பல வீடுகளில் எங்களைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் நிறைய உண்டு. இந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்து வாழ்பவர்களில் நானும் ஒருவர். எனது உள்ளத்தில்  இருக்கும் பலவற்றை வலைப்பின்னல் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணி இவ் வலைப் பதிவை ஆரம்பித்திருக்கிறேன்.

 

0 comments: