எத்தனை கோடி

Wednesday, March 4, 2009 | | |

எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன இதயச் சோலையிலே- இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன எந்தன் வாழ்வினிலே

எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன எனது கண்களிலேஅதி்ல்
 எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன எந்தன்வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன பாழும் மனதினிலே-அதில் 
ஓசையில்லாமல்ஓய்ந்தவை பற்பல உலக வாழ்க்கையிலே

கொள்கையும் நேர்மையும் உண்மையும்பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே-அதில் கல்லால் அடித்த கனிபோல் உதிர்ந்தவை கணக்கில வாழ்க்கையிலே.


                                                    படித்ததில் சுவைத்தது.

0 comments: